ஐஜிபி: மலேசிய தினத்தில் ஐஎஸ் மிரட்டலைச் சமாளிக்க போலீஸ் தயார்

polisமலேசிய   தினமான  செப்டம்பர்  16-இல்  ஐஎஸ்   மிரட்டல்    எதுவும்   எழுமானால்   அதைச்   சமாளிக்க   போலீஸ்    ஆயத்தமாக   உள்ளதாக   இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்  போலீஸ்   காலிட்   அபு   பக்கார்   இன்று  உறுதியளித்தார்.

“இஸ்லாமிய   தீவிரவாதிகளோ    அல்லது   வேறு   எவருமோ    மலேசிய   தினக்   கொண்டாட்டங்களுக்கு  மிரட்டலாக  இருந்தால்  அந்த  மிரட்டலைச்   சமாளிக்க   நாங்கள்  நாடு  முழுவதும்      எங்களின்   தயார்நிலையை  முடுக்கி     விட்டிருக்கிறோம்”, என்று  காலிட்  கூறினார்.

புக்கிட்   அமான்   பள்ளிவாசலில்   பேசிய   ஐஜிபி,  அன்று  முழுவதும்  போலீஸ்   ஆயத்தநிலையில்   இருக்கும்  என்றார்.