1எம்டிபிமீதான இரகசியக் காப்பை அகற்றக் கோரும் அஸ்மினின் மனு அக்டோபர் 26-இல் விசாரணைக்கு வருகிறது

azmin1972    அதிகாரத்துவ     இரகசியச்   சட்ட(ஓஎஸ்ஏ)த்தின்கீழ்      பாதுகாக்கப்படும்   1எம்டிபி    மீதான   தலைமைக்  கணக்காய்வாளர்    அறிக்கையை    வெளியிட    அனுமதியளிக்க    வேண்டும்  என    சிலாங்கூர்   மந்திரி  புசார்   அஸ்மின்   அலி    தாக்கல்   செய்த   மனு    அக்டோபர்  26-இல்   விசாரணைக்கு    வரும்.

மனுவை  விசாரணை   செய்வதற்கான    நாளை   உயர்  நீதிமன்ற   துணை  பதிவாளர்   நோராஸ்லின்    ஒத்மான்   இன்று   நிச்சயித்தார்.

அம்மனு  மீதான  விசாரணை    கோலாலும்பூர்  உயர்   நீதிமன்ற     நீதிபதி    ஹனிபா    ஃபாரிகுல்லா  முன்னிலையில்     நடைபெறும்    என   அஸ்மினின்   வழக்குரைஞர்   மிச்சல்  சுனிதா   குமார்     தெரிவித்தார்.

பிகேஆர்    துணைத்     தலைவருமான     அஸ்மின்,   கடந்த    மாதம்   நீதிமன்ற  மேலாய்வுக்குக்   கோரிக்கை  விடுக்கும்  அம்மனுவைத்   தாக்கல்    செய்தார்.  அம்மனு   அந்தத்  தணிக்கை    அறிக்கை   ஓஎஸ்ஏ-இன்கீழ்  பாதுகாக்கப்படுவது    அரசமைப்பை   மீறும்  செயல்      என்று    அறிவிக்க  வேண்டுமெனக்  கோரிக்கை   விடுக்கிறது.