உலக வரலாற்றில் முதன் முறையாக! மூன்று பேருக்கு பிறந்த குழந்தை

இன்றைய நவீன மருத்துவ உலகின் வளர்ச்சியாக மூன்று பெற்றோர் சேர்ந்து மரபணு மூலம் ஒரு குழந்தையை பெற்றெடுத்த ஆச்சரிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

I.S and M.H என அழைக்கப்படும் இருவர் கருச்சிதைவு பிரச்சைனையால், இளம் வயதிலேயே இரண்டு குழந்தைகளை இழந்தவர்கள் ஆவர்.

இதில் I.S-க்கு நரம்பு மண்டலத்தை பாதிக்கும் விசித்திர நோய் இருந்துள்ளது.

எனவே குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்து பிரபல மருத்துவர் ஜான் ஜாங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் Spindle Nuclear Transfer முறைப்படி, வேறு ஒரு ஆணின் விந்துவை கருமுட்டையில் செலுத்தி மற்ற இருவருடன் சேர்த்து மூன்று பெற்றோர் மரபணு (Three Parent Child) முறையில் குழந்தை பெற முடிவு செய்தனர்.

ஆனால் இந்த முறையில் குழந்தை பெற்றெடுப்பது அமெரிக்காவில் நடைமுறையில் இல்லாத ஒன்றாகும்.

அதனால் அந்த குழு மெக்சிகோ சென்றது, பிறகு அதற்கான சிகிச்சை முறைகள் எடுத்துக் கொள்ளப்பட்டு வெற்றிகரமாக குழந்தையும் பிறந்துள்ளது.

பேபி ஏ என பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த குழந்தை தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

-http://news.lankasri.com