பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளதாக அரசாங்கப் பல்கலைக்கழக மாணவர் கைது

igpபுக்கிட்    அமான்     சிறப்புப்    படையின்     பயங்கரவாத-எதிர்ப்புப்    பிரிவினர்     சிலாங்கூர்,  கிளந்தான்,   பேராக்,  கெடா,   பினாங்கு,  சாபா   ஆகியவற்றில்   மேற்கொண்ட    அதிரடி    நடவடிக்கையில்     20க்கும்  38வயதுக்குமிடைப்பட்ட    பலரைக்  கைது    செய்திருக்கிறார்கள்.

கைது   செய்யப்பட்டோரில்   ஐவர்  வணிகர்,   நால்வர்   தொழில்நுட்பர்கள்,   இருவர்   வேலையற்றோர்,     ஒருவர்     அரசாங்கப்  பள்ளி   மதியுரைஞர்,   ஒருவர்    செயல்முறை   மேலாளர்,   ஒருவர்   பழம்பொருள்   விற்பனையாளர்,    ஒருவர்   மாணவர்  என     போலீஸ்   படைத்  தலைவர்    காலிட்  அபு   பக்கார்  நேற்றிரவு   வெளியிட்ட     ஓர்   அறிக்கையில்   கூறினார்.

அந்த   மாணவர், 20,   ஜோகூர்   பல்கலைக்கழகத்தில்   படிப்பவர்.  செப்டம்பர்   22–இல்   கேஎல்   அனைத்துலக   விமான   நிலையத்தில்   கைது   செய்யப்பட்டார்  என   காலிட்    கூறினார்.