ஐ.எஸ் அமைப்புக்கே அப்புவைத்த அந்த 5 பேர் யார் ?

ஐ.எஸ் அமைப்பு தற்போது பாரிய பின்னடைவுகளை சந்தித்து, அனைத்து இடங்களையும் இழந்துள்ளது. அவர்கள் மொசூல் நகரில் தற்போது சிக்குண்டு உள்ள நிலையில். இறுதிகட்ட தாக்குதலை நடத்தி அவர்களை முற்றாக அழிக்க ஈராக் ராணுவம் முணைப்புக் காட்டி வருகிறது. இன் நிலையில் ஈராக்கில் உள்ள பல எண்ணைக் கிணறுகளை தம்வசம் வைத்திருந்த ஐ.எஸ் இயக்கம். அதனூடாக பல மில்லியன் டாலர்களை சம்பாதித்து வைத்துள்ளது.

அவர்கள் பதுக்கிவைத்திருந்த பல மில்லியன் டாலர்களை, 5 பேர் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள். இதனை திடீரென கண்டுபிடித்த அவர்கள், குறித்த 5 பேரையும் கொல்வதற்காக ஒரு தனிப்படையை அமைத்து.  அவர்களை போட்டுத் தள்ள ஆட்களை அனுப்பிவைத்துள்ளார்கள் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.

-http://www.athirvu.com