கூட்டு ரோந்துக்கு முதல் தடவையாக இணங்கிய இந்தியா

usnavy_killtnfishermanஇலங்கை – இந்திய மீனவர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் இரண்டு நாட்டு கடற்படையினரும் கூட்டு கண்காணிப்பை மேற்கொள்ளும் இலங்கையின் யோசனையை பரிசீலிக்க இந்தியா முதல் தடவையாக இணங்கியுள்ளது.

இது இலங்கையின் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதை தடுக்க உதவும் என்று இந்திய செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளுடன் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கை பல தடவைகளாக இந்த கூட்டுக்கண்காணிப்பு கோரிக்கையை விடுத்து வந்தது.

எனினும் இந்தியா பல்வேறு காரணங்களை கருத்திற்கொண்டு அதனை நிராகரித்து வந்தது.

இந்தநிலையில் முதல்தடவையாக இந்தியா அதனை பரிசீலிக்க இணங்கியுள்ளது.

-http://old.tamilwin.com

TAGS: