டட்டாரான் மெர்டேகாவுக்கு வெளியில் பெர்சே பேரணி நடத்தப்படுவது குறித்து முறையாக தெரிவிக்கப்படவில்லை என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் குறிப்பிட்டிருப்பது சரியல்ல என்கிறார் பெர்சே முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன்.
முறையான அறிவிக்கையும் பேரணியில் கலந்துகொள்வோர் அணிவகுத்துச் செல்லும் வழிகளைக் காண்பிக்கும் வரைப்படமும் போலீசிடம் கொடுக்கப்பட்டு விட்டதாக அம்பிகா தெரிவித்தார்.
“பெர்சே அந்த ஆவணங்களை போலீசிடம் கொடுத்தபோது நானும்தான் உடன் சென்றேன். எனவே, பொதுமக்கள் அஞ்சாமல் திரண்டு வர வேண்டும்”, என்றாரவர்.
காலிட் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அச்சத்தை உண்டாக்குவதற்காக அப்படிக் கூறியிருக்கலாம் என்று அம்பிகா நினைக்கிறார்.