அம்பிகா: ஐஜிபி கூறுவது தவறு, முறையான அறிவிக்கை கொடுக்கப்பட்டது

ambikaடட்டாரான்  மெர்டேகாவுக்கு   வெளியில்   பெர்சே   பேரணி   நடத்தப்படுவது   குறித்து   முறையாக    தெரிவிக்கப்படவில்லை   என்று   போலீஸ்   படைத்   தலைவர்   காலிட்  அபு   பக்கார்    குறிப்பிட்டிருப்பது     சரியல்ல   என்கிறார்   பெர்சே   முன்னாள்    தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன்.

முறையான    அறிவிக்கையும்   பேரணியில்   கலந்துகொள்வோர்    அணிவகுத்துச்   செல்லும்     வழிகளைக்   காண்பிக்கும்   வரைப்படமும்    போலீசிடம்  கொடுக்கப்பட்டு  விட்டதாக  அம்பிகா    தெரிவித்தார்.

“பெர்சே   அந்த   ஆவணங்களை   போலீசிடம்   கொடுத்தபோது    நானும்தான்   உடன்   சென்றேன்.  எனவே,  பொதுமக்கள்  அஞ்சாமல்   திரண்டு  வர  வேண்டும்”,  என்றாரவர்.

காலிட்  ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு    அச்சத்தை  உண்டாக்குவதற்காக   அப்படிக்  கூறியிருக்கலாம்   என்று  அம்பிகா   நினைக்கிறார்.