பெரும் மனித புதை குழி: மொசூல் நகரில் 100 பேர் சடலம்

mosulஈராக்கில் உள்ள மோசூல் நகரை, ஈராக்கிய ராணுவம் நெருங்கி வரும் நிலையில். ஐ.எஸ் தீவிரவாதிகள் பின் நோக்கி நகர்ந்து வருகிறார்கள். இதேவேளை நகரின் எல்லை புறத்தில் பலமாக துர் நாற்றம் காணப்பட்டது. இதனை அடுத்து ராணுவத்தினர் குறித்த பகுதியில் உள்ள மண்ணை தோண்டி பார்த்தவேளை. பல சிறுவர்கள் தலை மற்றும் முண்டங்கள் காணப்படுகிறது. சுமார் 100 பேரை இவ்வாறு ஐ.எஸ் தீவிரவாதிகள் வெட்டிப் புதைத்துள்ளார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பல மனிதப் படுகொலைகளை செய்யும் ஐ.எஸ் அமைப்பு. தற்போது தமது நிலைகளை இழந்து வரும் நிலையில். மக்களை பிடித்து கொலை செய்து அவர்களை புதைத்து வருகிறார்கள். முள்ளிவாய்க்காலுக்கு இணையான பல மனிதப் படுகொலைகள் மொசூல் நகரில் இடம்பெற்று வருகிறது. ஐ.எஸ் அமைப்பு மட்டும் அல்ல. அங்கே குண்டுபோடும் வெளிநாடுகள் கூட பல அப்பாவி மக்களை கொலை செய்து வருகிறதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

-http://www.athirvu.com