சென்னை: நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் 2 தமிழர்கள் வெற்றி பெற்று அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் முதன் முறையாக நுழைகின்றனர். அமெரிக்க வாழ் இந்தியரான ராஜா கிருஷ்ணமூர்த்தி, இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு செல்லும் வாய்ப்பை ராஜா கிருஷ்ணமூர்த்தி பெற்றுள்ளார்.
ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு 3 வயது இருக்கும் போது அமெரிக்காவிற்கு அவர்களது குடும்பம் குடிபெயர்ந்தது. அங்கேயே வளர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி, சட்டப்படிப்பு படித்தார். மேலும், என்ஜினியர் படிப்பையும் படித்து அமெரிக்காவில் தொழில் அதிபாராகவும் வலம் வருகிறார். அரசியலில் ஈடுபட்டு தற்போது பிரதிநிதிகள் சபைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிபர் ஒபாமாவின் நீண்ட கால நண்பராக இருந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி, ஒபாமா அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது அவரது வெற்றிக்காக தீவிரமாக பாடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைப் போன்றே மற்றொரு இந்திய வம்சாவளியினரான பிரமிளா ஜெயபாலும் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1965ம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
வாழ்த்துக்கள் !!!
இந்தியர்களால் ஜனநாயகத்திற்கு பெருமை ……
“தமிழ் தமிழ் தமிழ்” மட்டும் போதும் என்று வாதிட்டு கொண்டிருந்தாள், உலகத்திலேயே மிக பழமையான (227 வருடம்) ஜனநாயக மக்கள் அவையில் நுழைய முடியுமா ? இன்று தமிழர்களும் ஆங்கிலேயர்கள் ஜனநாயகத்தில் உரிமையுடனும் , திறமையுடனும் செயல் ஆற்ற நமக்கு நல்ல வழி பிறந்துள்ளது. ஈழ தமிழர்களின் பிரச்சனைகளை, நாம்தான் வெள்ளையர்கள் உணர்ச்சி பொங்க அவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் மக்கள் அவையில். இதற்க்கு கல்வி அறிவு, பிற இனத்தவருடன் அரசியல் செய்யும் திறமை, மற்ற இனத்தவர்களுக்கு “நாமும் மற்ற மனித பிரிவுகளை மதிக்கும் திறன் உள்ளவர்கள்” என்று நிரூபிக்கும் பாங்கு, என அடிக்கி கொண்டே போகலாம். அனைத்தும் தேவை. அதில் வெட்ரி கொண்டு , இரண்டு இந்திய தமிழர்கள் அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு சேவை செய்வர். பெருமையாக இருக்கிறது. சும்மா வாயிலேயே வடை சுட்டு விற்கும் மூடர்களுக்கு மத்தியில், இது பெரிய விஷயம் … வாழ்த்துக்கள் …
ஆங்கிலம் போதும், தமிழ் வேண்டாம் என்றால் நீங்கள் ஏன் இங்கு எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்? மலேசியாவில் கல்வியாளர்களிடையே ஆங்கிலம் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறதே! கொஞ்சம் ஆங்கிலம் பக்கம் போய் அங்கு பேர் வாங்குங்களேன்! இங்கு தமிழர்களிடையே உங்கள் திறமையைக் காட்டுவது போல் அங்கும் காட்டுங்கள்! நாங்களும் உங்கள் ஆங்கிலத் திறனைப் பார்த்து வியப்படைவோம்!
நாச்சிமணிக்கு நுனிப்புல் நல்ல சுவையா இருக்கு போலெ…
என்னய்யா இது ? தோற்றாலும் குறை சொல்லறீங்க…..ஜெயிச்சாலும் பொறாமை படறாய்ங்க ?
(“தமிழ் தமிழ் தமிழ்” மட்டும் போதும்) தமிழர்கள் நாங்க தமிழ் என்றுதான் கத்துவோம், தமிழர் அல்லாத உனக்கு ஆசையா இருந்தா இங்கிலிஷ் இங்கிலிஷ். என்று கத்து.. (வாயிலேயே வடை சுட்டு விற்கும் மூடர்களுக்கு மத்தியில்) வடை வேண்டும் என்றால் காசை கொடுத்திட்டு வாக்கிக்கிட்டு போ. வடை ஆசை போல , அதான் வடை பற்றி ரொம்ப பேசுற ..
புலிகேசி, ‘நாச்சி’ என்பது தமிழ் நாட்டை ஆண்ட சில மன்னர்களின் பரம்பரையில் வரும் பெயர்கள் . ராஜ ராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியார். இவர் விமலாதித்தன் என்ற ஆந்திராவின் மன்னனை மணந்தார். தமிழ் நாட்டில் இருந்து வெள்ளைக்காரர்களை எதிர்த்த இருவர்கள் மிக முக்கியமானவர்கள், யார் என்றால்: அது வேலுநாச்சியார் மற்றும் மருதநாயகம். வேலுநாச்சியார் ஒரு ராணி, தமிழ் நாடடை சேர்ந்தவர். ஆனால் செம்பருத்தியை பெயர் மாத்தி எழுதுவதற்கு காரணம், 2008 ஆம் ஆண்டு சாமி வேலுவின் TAFE
காலேஜ்ஜை எதிர்த்து பலவிஷயங்களை இணையத்திற்கு கொண்டு வந்தோம். எனவே போலீஸ் தலையிட்டு, தீட்டலாம் என்று பார்த்தது, எப்படியோ ஆதாரம் இல்லாமல் தப்பித்து கொண்டோம். எனவே பெயர் மாட்ட்றி எழுதுகிறோம்.
வாழ்க நாச்சிமணி!
தமிழை கொச்சை படுதியவனை தாய் தடுதாலும் விடாதே என்று இருகிறது நமது தமிழில். ஆங்கிலம் அவர்கள் கற்றாலும் அவர்கள் நமது தாய் தமிழ் நாட்டில் இருந்து குடியேறியவர்கள். தமிழனக வாழ்ந்து தமிழ் பெயரையே வைத்து ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் நமக்கு பெருமை சேர்த்து உள்ளார்கள். இருவருக்கும் வாழ்துக்கள். நிச்சயம் தமிழ் வாசம் அந்த சபையில் ஒரு வார்த்தை ஒலிக்கும்போது உலகமே தமிழனை நிச்சயம் திரும்பி பார்க்கும் காலம் வரும்…… நமது தமிழ் இசையமைப்பாளர் திரு. ரகுமான் கூட ஒஸ்கர் விருது வாங்கும்போது கூரிய வார்த்தை எல்லாம் விருதும் இறைவனுக்கே என்று அப்வளவு பெரிய சபையில் தமிழில் கூறினார். இதை நாம் மறந்து விட வேண்டாம். இன்னும் எத்தனையோ தமிழர்கள் உலகில் சாதித்து சாதனை செய்து உள்ளார்கள். நாம் தமிழனாக பிறந்ததற்கு முதலில் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். தமிழன் எங்கு வாழ்ந்தாலும் சாதிப்பான்.
தமிழர்கள் நாங்க தமிழ் என்றுதான் கத்துவோம் எப்படி
அன்று அண்ணன்-அண்ணி-மாமா-மாமி என்று அழைத்தது மாறி இன்று அனைவரையும் அங்கிள்-ஆண்ட்டி தமிழில் அழைக்கிறீர்களே அது மாதிரியா
நாச்சிமணி நீ யாரா வேண்டுமானாலும் இருந்துட்டு போ..அது உன் உரிமை! அதேபோல் தமிழ்,தமிழ்,தமிழ்…தமிழர் நாடு! தமிழர் ஆட்சி! இழந்ததை மீட்டு இருப்பதை காப்பது எங்கள் உரிமை!
????? எதை பற்றி இந்த தர்க்கம்?
மன்னன் அவர்களே நான் என் அடையாளத்தை சமீபத்தில் செம்பருத்தியை வெளியிட்டிருந்தேன்…. அதற்கு புளித்த கேசி , என்னமோ கரண்டை கண்டு பிடித்தவர்போல ‘பீல்” பணிக்கிறாரு….
பூச்சிமணி,நீ யாருன்னு உன் வாயாலே வந்த காரணம்…எங்கடா தனித்து வாழும் தாய்மார்களிடம் இருந்து செருப்படி வாங்க போறோம் அதை அப்படியே you tube லே…..எல்லாம் ஒரு பயம்தான்! இல்லைன்னா நீயாவது உன் அடையாளத்தை வெளியிடுவதாவது! இப்போகூட ஒன்னும் கெட்டு போகலே…
“வாழ்க நாச்சிமணி! ” என்று தேனீ எழுதி உள்ளார். ஆச்சிரியமாக இருந்தாலும், என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். வாழ்க என்றதிற்க்காக அல்ல. உங்கள் தமிழ் தொண்டுக்காக !
தமிழ் வாழ்க! என்பது எங்கள் உரிமை. அதற்காக ஆங்கிலம் ஒழிக என்றோ மலாய் ஒழிக என்று சொல்லவில்லை. தமிழ் எங்கள் உயிர். மற்றவை வயிற்று பாட்டுக்கு!
உலகிலேயே தமிழர்கள் எந்த மாெழிகற்றாலூம சிறந்த அறிவாளிகளாம்.முன்னால் பாக்கிச்தான் அதிபர் சாெல்கிறார்.அந்த இரு தமிழர்களுக்கும் என் அன்பான நல்வாத்துக்கள்.
எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை…… நாம் எல்லோரும் நன்றாக தான் யோசிக்கிறோம்…. வாதிடுகிறோம்; ஆனால் ஒரு உன்னதமான, புதுவிதமான அரசியல் கொள்கை மலரவில்லையே …. ஏன் ?
1. ஆங்கிலம் அறிவியல் மொழி; தமிழ் மெய்யறிவு மொழி. அறிவியல் மெய்யறிவில் அடக்கம். இந்த இரண்டிற்குமுள்ள உண்மை வேறுபாடு அறியாமல் ஏதோதோ உளறிக் கொண்டிருக்கின்றோம். அறிவியல் மொழியென்பது பஞ்ச பூதத் தத்துவங்களோடு காலத் தத்துவத்தையும் உள்ளடிக்கிய அறிவு. அதற்க்கு மேல் அந்த அறிவியல் ஒரு அணுவளவுக் கூட நகர்ந்துச் செல்லமுடியாது. ஆனால் மெய்யறிவு மொழியான தமிழ் இறைவனை நோக்கி பயணம் செல்லும் மொழி; இறைவனோடு சம்பந்தப் பட்ட மொழி. திருப்புகழில் அருணகிரிநாத சுவாமிகள் ” முந்துத் தமிழ் மாலைக் கோடிக் கோடி என்று தமிழைப் புகழ்ந்துப் பாடுகின்றார். அரியத் தமிழ் தாராயென்றும் கந்தக் கடவுளிடம் வேண்டுகின்றார். ஆனால் நாம் தமிழை உதாசீனப் படுத்துகின்றோம்; அந்த அருணகிரிநாத சுவாமிகளோடு நம்மை ஒப்பிட்டுக் கொள்ள முடியுமா? திருமுருக கிருபானந்த சுவாமிகள் அவர்களோ இந்தப் பாடலை, மெய்ஞ்ஞான மொழியான தமிழை, மென்மையான தமிழை எல்லா மொழிகளையும் முந்திக் கொண்டு இறைவனிடம் செல்லும் மொழியென்று போற்றுகின்றார். பிறப்பிலிருந்து இறப்பு வரை இறைவனென்பவன் நம் உயிர் மூச்சு; மரணத்திற்குப் பின்பும் நமக்கு ஏதோவொரு வாழ்க்கையுண்டென்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இந்தவுலக வாழ்க்கையை மட்டும் நாம் எண்ணிக் கொண்டு வாழ்ந்துக் கொண்டிருக்கக் கூடாது. உலக வாழ்க்கைக்கு ஆங்கிலம்; உலக வாழ்க்கையோடு நம் எஞ்சிய வாழ்க்கைக்கும் தமிழ்; தமிழ் நம் உயிர் மூச்சி. இந்தவுண்மைகளை சரியாக உணர்ந்து விட்டால் நாம் தமிழைப் பற்றி இப்படிப் பேச மாட்டோம். இனிமேல் பேசவும் கூடாது. தமிழோடு ஆங்கிலத்தை மட்டுமின்றி மற்ற மொழிகளையும் படிப்போம்; பயன் பெறுவோம்.
2.தேர்ந்தெடுக்கப் பட்ட 2 தமிழர்களும் இந்தியாவில் பிறந்தவர்கள்; ஆனால் இன்று முதல் வல்லரசு நாடான அமெரிக்கா நாடாளுமன்றப் பிரதிநிதிகள். இந்த தாய்மண்ணில் பிறந்து வளர்ந்த நாம் எதையும் சாதிக்க முடியவில்லை. ஏனென்று சிந்திக்க வேண்டும்! நம் பலவீங்களை நாம் கண்டறிந்து அதை சரிச் செய்துக் கொள்ள வேண்டும்.3. நம்மிடம் போதிய அரசியல் பலமில்லை; அதை உருவாக்கிக் கொள்ள வேண்டும்; வளர்த்துக் கொள்ளவும் வேண்டும். சரியான ஒற்றுமையில்லாச் சமுகம் ஒற்றுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை; இதைப் பாட்டாக பாடினாலும், தகவல் சாதனங்களில் இசையாகக் கேட்டாலும் போதாது. நடைமுறை வாழ்க்கையில் இந்த அறிய உண்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். “ஒன்றுப் பட்டால் உண்டு வாழ்வு”. இதை நாடிச் செல்வோம்.