சிவப்புச் சட்டையினர் மஸ்ஜிட் நெகாரவை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அது பெர்சே பேரணியின் ஐந்து ஒன்றுகூடும் இடங்களில் ஒன்றாகும்.
ஆனால், சிவப்புச் சட்டையினரின் தலைவர் ஜமால் யுனூஸ் அங்கு காணப்படவில்லை.
“நாளை வரையில் நாங்கள் இங்கு இருப்போம். அதிகமானோர் இங்கு வந்து கூடுவர்” என்று ஜாமாலின் உதவியாளர் ரஸாலி ஸக்காரியா கூறினார்.
ஜமால் தற்போது இருக்குமிடம் தெரியாது என்று கூறப்பட்டது. இருப்பினும் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று வதந்தி உலவுகிறது.
அந்தப் பேர்வழி கைது செய்யப்படடாலும் அவனுக்கு லாக்கப்பில் ராஜமரியாதைதான்.