வெளி உலக தொடர்பின்றி வாழும் மனிதர்கள்!

வெளி உலக தொடர்புகள் இன்றி காட்டில் வாழும் மனிதர்கள் சிலர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களில் சிலர் சிறிய வஸ்திரத்தை அணிந்திருந்தாலும் சிலர் ஆடைகள் அணியாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

பிரேசில் மற்றும் வெனிசூலா ஆகிய நாடுகளின் எல்லையில் இப்படியான மனிதர்கள் சுமார் 35 ஆயிரம் வாழ்வதாக கூறப்படுகிறது.

அமேசன் காடுகளுக்கு மேலாக பறந்து சென்ற விமானத்தில் இருந்த ஒருவர் வெளி உலகுடன் தொடர்பின்றி வாழும் காட்டு வாசிகளின் கிராம் ஒன்றை கண்டுள்ளதுடன் அதனை புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்த கிராமத்தில் சுமார் 100 பேர் கொண்ட குழுவினர் வாழ்வதாக தெரியவருகிறது.

 

-http://www.tamilwin.com