4 நாள் குளிக்காமலிருந்த ஜமால் ‘பெர்சே 7’ தொடங்குகிறார்

campaignசிவப்புச்  சட்டைகள்    தலைவர்   ஜமால்   முகம்மட்  யூனுஸ்    நான்கு   நாள்களுக்குத்   தடுத்து  வைக்கப்பட்டிருந்தார்.  அந்த   நான்கு   நாள்களும்  அவர்  குளிக்கவில்லை.

இன்று  அம்பாங்   போலீஸ்   தலைமையகத்தில்   விடுவிக்கப்பட்டதும்   செய்தியாளர்களைச்   சந்தித்ததும்    ஜமால்  முதலில்   சொன்னது  இதுதான்:   “நான்கு   நாள்களாக    நான்  குளிக்கவில்லை”.

நான்கு  நாள்   குளிக்காமல்   தடுப்புக்  காவலில்   இருந்ததால்    அவருக்கு  “பெர்சே  7”  இயக்கம்  தொடங்கும்   “உத்வேகம்”  கிடைத்துள்ளது.

“சிலாங்கூரைப்  பாதுகாக்கும்”  அவ்வியக்கத்தை     நாளை   தொடங்கப்போவதாகக்  கூறினார்  ஜமால்.

ஷா  ஆலமில்    சிலாங்கூர்    செயலகக்  கட்டடத்தின்   முன்பாக    பிற்பகல்  மணி   3க்கு  அவ்வியக்கம்   தொடக்கப்படும்.  “பொய்  சொல்லும்    மாநில   அரசாங்கத்திடமிருந்து   சிலாங்கூர்  மக்களைப்   பாதுகாப்பதுதான்”   அதன்  நோக்கமாம்.