இலங்கையை கண்டித்து பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை கண்டித்து பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்திற்கு அமைவாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பாடல் அமைச்சினால் இந்தப் போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

“RIGHT TO LIFE AWARENESS RALLY”என்ற தொனிப்பொருளிகள் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் “10 Downing Streetக்கு முன்பாக நடைபெற்றது.

நேற்று மதியம் 01.00 மணி தொடக்கம் மாலை 04.00 வரை நடைபெற்ற போராட்டத்தில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

-http://www.tamilwin.com

TAGS: