வடக்கில் அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கு முன்னாள் போராளிகள் காரணமல்ல: புனர்வாழ்வு ஆணையாளர்

ltte cadreவடக்கு மாகாணத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற எந்தவொரு அசம்பாவித செயற்பாடுகளுக்கும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் எவரும் காரணமில்லை என்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு பயிற்சி வெற்றிகரமாக அமைந்ததால் அவர்கள் மீண்டும் ஒருபோதும் மோதலுடன் தொடர்புபட மாட்டார்கள் என்றும் எதிர்வரும் இரண்டு வருட காலப்பகுதியில் புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கைகளை முற்றாக நிறைவு செய்து கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-http://www.puthinamnews.com

TAGS: