புதிய அரசியலமைப்பு தொடர்பில் இந்தியாவுடன் பேச முடிவு: மாவை

tna-leadersஇலங்கையின் புதிய அரசியலமைப்பு தொடர்பில் இந்தியாவுடன் பேசுவதற்கு விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

புதிய அரசியலமைப்பில் சர்வதேசத்தின் பங்களிப்பு இருக்க வேண்டும், குறிப்பாக இந்தியாவின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புவதாக அந்தக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் தொடர்பில் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-http://www.puthinamnews.com

TAGS: