யாழ்ப்பாண மக்களின் மனிதாபம்…! நெகிழ்ச்சியில் தென்னிலங்கை மக்கள்

yarl accidentகடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 11 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்திருந்தனர்.

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் அரச பேரூந்தும் வேன் ஒன்றும் மோதுண்டமையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருந்தது.

இந்த அனர்த்தத்தினல் போது பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன முரண்பாடுகள் பாராது பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்க உதவிய யாழ்ப்பாண மக்களுக்கு, சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழர்கள் சிங்களவர்கள் மீது வெறுப்புணர்வுடன் இருப்பார்கள் என்ற நிலைப்பாட்டை தாங்கள் இந்த சம்பவத்தை அடுத்து மாற்றிக் கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, பாதிக்கப்பட்ட உறவினர்களினால் இந்த தகவலை வெளியிடப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: