மாவீரர் துயிலுமில்லங்களை புனித பிரதேசங்களாக அறிவிக்க தீர்மானம்

maaveerar_2012கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனித பிரதேசங்களாகஅறிவிக்குமாறு கோரும் தீர்மானம் ஒன்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுகூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் 24-12-2016கிளிநொச்சி மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் இடம்பெற்றது. இதன் போதே இந்ததீா்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது.

இணைத்தலைவா்களான வடமாகாண முதலமைச்சா் சி.வி. விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சா்விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினா்களான சி.சிறிதரன், அங்கஜன் இராமநாதன்ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகளால் குறித்ததீா்மானம் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டது.

இதனை தொடா்ந்து இணைத்தலைவா்களும் அங்கீகரிக்க கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு ஏகமனதாகஎடுத்துள்ளது.

இருப்பினும் கடந்த கால ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் பல தீா்மானங்கள்எடுக்கப்பட்டு அது அடுத்து வரும் நாட்களில் அவை அவ்வாறே கைவிடப்பட்ட நிலைமைகளேஅதிகம் எனவும் ஆனால் இந்த தீா்மானத்திற்கும் அந்த நிலைமை ஏற்பட்டுவிடக் கூடாதுஎன்றும் கலந்து கொண்ட பொது அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.

அத்தோடு மாவீரர் துயிலுமில்லங்கள் யாரால் புனித பிரதேசங்களாக அறிவிக்கப்படவேண்டும். அதற்கான சட்டரீதியான ஏற்பாடுகள் நடவடிக்கைகள் என்ன? எப்படி யாரால்இந்த நடவடிக்கைகள் முன்னெடு்க்கப்படவேண்டும் போன்ற விடயங்கள் தொடா்பில் எந்தக்கருத்து பரிமாற்றங்களும் இடம்பெறவில்லை.

-http://www.tamilwin.com

TAGS: