சற்று முன் 14 வயதுச் சிறுவன் பையில் நிறைய குண்டுகள் அதில் அ…கு அக்பர் என்று எழுதி உள்ளார்கள்

பெல்ஜியத்தின் தலை நகரில் சற்று முன்னர் கடும் பதற்றம் நிலவி வருகிறது. பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அவர்கள் நடத்திய சோதனை ஒன்றில், 14 வயதுச் சிறுவன் ஒருவனின் பையினுள் இருந்து பல குண்டுகளை அவர்கள் மீட்டுள்ளார்கள். அதில் ஒவ்வொன்றிலும் அ…கு அக்பர் என்று எழுதப்பட்டு உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புது வருட கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ள நிலையில், புது வருட கொண்டாட்டத்திற்கு மக்கள் அதிகமாக கூடும் இடங்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் குறிவைத்துள்ளார்கள். இவர்கள் என் நேரமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது பெல்ஜியத்தில் கண்டு பிடிக்கப்பட்ட குண்டுகளை தொடர்ந்து ஐரோப்பா முழுவதும் சிவப்பு எச்சரிக்கை போடப்பட்டுள்ளது.

பரிஸ் , லண்டன் , மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கும் சர்வதேச பொலிசாரும் புலனாய்வுப் பிரிவினரும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். எனவே புது வருடத்திற்கு மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மிகவும் அவதானமாக இருப்பது நல்லது.

-http://www.athirvu.com