லண்டனில் சிங்களவர் ஆர்பாட்டம்: தமிழர்களுக்கு உரிமை கொடுக்க கூடாது என்று நடு ரோட்டில் கோஷம்

london sinhala protestதமிழர்கள், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐ.நா சொல்வதை தான் இலங்கை அரசு கேட்ப்பதாகவும். அரசியல் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி, தமிழர்களுக்கு உரிமைகளை கொடுக்க இலங்கை அரசு முயல்வதாகவும் கூறி, லண்டனில் கூடிய பெரும் சிங்களவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் தமிழர்களுக்கு எந்த உரிமையும் கிடைக்க கூடாது என்று பல நாடுகளில் பல திட்டமிடப்பட்ட ஆர்பாட்டங்களை நடத்த உள்ள நிலையில்.

தமிழர்கள் வீட்டில் உட்கார்ந்து மானாட மயிலாட மற்றும் கல்யாணம் முதல் காதல் வரை நாடகம் பார்த்து ரசித்து வருகிறார்கள். மேலும் சிலர் நல்ல நல்ல உணவகம் சென்று சாப்பிட்டு உப்பி வருகிறார்கள். நாம் இவ்வளவு நாழும் கஷ்டப்பட்ட அனைத்தும் வீணாகப் போகும் நிகழ்வுகள் தற்போது நடைபெற ஆரம்பித்துள்ளது.

இப்போதாவது நாம் விழித்துக் கொள்ள வேண்டாமா ? ஒரு பக்கத்தில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதனை நாம் உலகறியச் செய்யவேண்டும். அப்படி என்றால் தான் மீண்டும் ஒரு கடும் கழுத்தத்தை நாம் இலங்கை மீது பிரயோகிக்க முடியும்.

-http://www.athirvu.com

TAGS: