பூமிக்கு அருகிலேயே வேற்றுக்கிரகவாசிகள்..! நாசா வெளியிட்ட ஆதாரத்தால் வியப்பில் உலகம்..!!

பல்லாயிரங்கணக்கான ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் விஞ்ஞானிகள் வேற்றுக்கிரக வாசிகளை தேடுகின்றார்கள். என்றாலும் அவர்கள் எமக்கு அருகிலேயே இருப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் அண்மையில் நாசா செவ்வாய்க் கிரகத்தில் வேற்றுக்கிரக வாசிகளின் இரகசியத் தளம் தொடர்பில் புகைப்படங்களை வெளியிட்டுள்ள காரணமாகும்.

செயற்கையாக அமைக்கப்பட்ட ஓர் இடம் செவ்வாய்க்கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒப்பீட்டளவில் மிகப் பிரம்மாண்டமாக காணப்படுகின்றது.

இந்த புகைப்படங்களின் மூலம் செவ்வாய் கிரகத்தில் வேரு உலகத்தினர் வாழ்ந்து வருவதாகவும். மாறிப்போன காலநிலையினால் அவர்கள் நிலத்தின் கீழ் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் எக்காரணத்திற்காக அப்படி வேற்றுக்கிரகவாசிகள் மறைந்து வாழ வேண்டும் என்ற கேள்வியும் இதனால் எழுந்துள்ளது.

மற்றொரு வகையில் செவ்வாய்க்கிரகத்தில் வேற்றுக்கிரக வாசிகள் நிலத்தின்கீழ் வாழ்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள கூற்றோடு தொடர்பு படுத்தி பார்க்கையில் இவ்வாறான ஆதாரம் உறுதிபடுத்தப்படுவதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் கூடிய விரைவில் வேற்றுக்கிரகத்தினருடன் தொடர்பு கொண்டு விட முடியும் என்றும் அதற்கான அடுத்த கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் மேற்குலக ஊடகங்கள் பரபரப்பாக பேசி வருவதனால் பலரும் பலவிதமான விமர்சனங்களை எழுப்பியுள்ளதோடு வியப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

-http://www.tamilwin.com