சக கைதியையே கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி சமைக்கும் சிறைக்கைதிகள்: அதிர்ச்சி வீடியோ

kolai1பிரேசில் சிறைச்சாலையில் இரு கும்பல்களுக்கிடையே நடந்த மோதலின் போது சிறைவாசிகள் கொலைசெய்த நபர்களை தீயிலிட்டு வறுத்தெடுக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலின் வட கிழக்கு பகுதியில் Alcacuz என்ற சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு அண்மையில் இரு கும்பல்களுக்கிடையே பயங்கரமான மோதல் ஏற்பட்டு, அதன் பின் வன்முறையாக மாறியது. இதில் ஏராளமான கைதிகள் கையில் கூர்மையான ஆயுதங்கள் கொண்டும் தாக்கியுள்ளனர்.

இதை அங்கிருந்த பொலிசார் கட்டுபடுத்த முயன்றும் முடியாததால், ஏராளமான பொலிசார் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னர் கைதிகள் அனைவரும் கட்டுப்படுத்தப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வன்முறையில் இதுவரை 26 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 22 பேரின் உடல்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் இரண்டு உடல்களின் தலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் அங்கிருந்த கைதிகள் அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் சிறைக்கைதி ஒருவர் நீண்ட கம்பி ஒன்றில் மனித உடல் ஒன்றை அதில் செலுத்தி (மீனை சுட்டு உண்பது போல்) பின்னர் தீயில் ஈட்டு வறுத்தெடுப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இதில் வரும் நபர் ஒருவர் கையில் கத்திகளுடன் இது ஆரம்பம் தான் என்றும் இது போல் இன்னும் நிறைய இருக்கிறது என்று கூறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-http://news.lankasri.com