இறந்தவர்களை தோண்டியெடுத்து மேக்கப் போடும் திகில் சடங்கு!

உலகில் விநோதமான மக்கள் வாழ்கின்ற வரை விநோதமான பண்டிகைகளுக்கு பஞ்சம் இருக்காது.

பண்டிகைகள் என்றாலே உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ளும் ஒன்றுதான் பண்டிகை. ஆனால் இறந்தவர்களை தோண்டியெடுத்து அந்த சடலத்துடன் தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ளும் விநோத பண்டிகை இந்தோனேஷியாவில் நடைபெறுகிறது.

இந்தோனேஷியாவின் Sulawesi தீவுப்பகுதியில் வசித்து வரும் Tojarans இன மக்கள், உலகத்துக்கு மட்டுமல்ல, இந்தோனேஷிய நாட்டுக்கே பரீட்சியப்படாதவர்கள்.

இவர்களை பற்றிய முழு விவரம் அந்நாட்டு மக்களுக்கே முழுமையாக தெரியாது.

இந்த மக்கள், தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தங்களது உறவினர்கள் யாரும் இறந்துவிட்டால், அவர்களது உடலை தோண்டி எடுத்து, அதற்கு புதிய ஆடை உடுத்து, அழகு ஒப்பனைகள் செய்து தங்களது அன்பினை பகிர்ந்துகொள்கின்றனர்.

அதாவது, ஒரு நபர் இறந்து 3 வருடங்களுக்கு பின்னர் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த மக்களுக்கு இறப்பு என்ற ஒன்று கிடையாது. நாங்கள் அனைவரும் எப்போது ஒற்றுமையுடன் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம் என்பதற்காகவே இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மேலும், இந்த பண்டிகை மிக முக்கியமான பண்டிகை என்பதால், இந்த மக்கள் தங்கள் உறவினர்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்கின்றனர். வேற்று இனத்தவர்களுடன் எவ்வித தொடர்பையும் வைத்துக்கொள்ள இவர்கள் விரும்புவதில்லை.

-http://news.lankasri.com