130 மனைவிகள்! 203 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த மதபோதகர் காலமானார்

நைஜீரியாவில் 130 மனைவிகள், 203 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த முன்னாள் முஸ்லீம் போதகர் பாபா மசபா 93 வயதில் காலமானார்.

நோயால் அவதிப்பட்டு வந்த பாபா மசபா என்றழைக்கப்படும் முகமது பெல்லோ அபூபக்கரின் உயிர் மத்திய நைஜர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பிரிந்துள்ளது.

அவரது இறுதிசடங்கில் மாபெரும் கூட்டம் கலந்து கொண்டது. அவர் 130 மனைவிகளும், 203 குழந்தைகளையும் கைவிட்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும், அவரது மனைவிகளில் சிலர் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மத போதகராக திகழந்து வந்த பாபா மசபா தன்னிடம் உதவி கேட்டு வந்த பெண்களிடம் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து, பின்னர், அவர்கள் விருப்பத்துடன் திருமணம் செய்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com