இப்படி தான் தலையை வெட்ட வேண்டும்: இளம் சிறுமிகளுக்கு ஐ.எஸ் பயிற்சி

ஐ.எஸ் தீவிரவாதிகளில் ஆண்கள் எப்படியோ அதே போல தான் பெண்களும். ஐ.எஸ் விதிமுறைகளை மீறுபவர்கள் அவர்களால் தண்டிக்கப்படுவார்கள்.

ஈராக், ஈரான், சிரியா போன்ற நாடுகளில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் எப்போதும் அதிகமாகவே உள்ளது.

பெண் ஐ.எஸ் ஜிகாதிகள் கொடூரமான பல செயல்களில் ஈடுப்படுகின்றனர். தற்போது அதிக அப்படி சில சம்பவங்கள் நடைபெறுகின்றன.

ஈராக் நாட்டில் Faten (10) என்னும் சிறுமி தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் தன் வீட்டு வாசலை சுத்தம் செய்ய அவர் தனியாக வந்துள்ளார்.

இதை பார்த்த பெண் ஜிகாதிகள் Faten ஐ நீ எப்படி தனியாக வீட்டுக்கு வெளியில் வரலாம் என கூறி மிரட்டியுள்ளனர். சத்தம் கேட்டு Fatenன் தாயும் அங்கு வந்துள்ளார்.

இருவரையும் கடத்தி சென்ற அவர்கள், இருவரில் ஒருவரை பற்களால் கடிப்போம்.

யாரை என நீங்களே முடிவு செய்யுங்கள் என கூற வெறும் பல் தானே எனFaten ஒத்து கொண்டுள்ளார்.

ஆனால் ஜிகாதிகள் இரும்பால் செய்யப்பட்ட பற்களை கொண்டு அவரை கடுமையாக குத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதே போல இன்னொரு சம்பவத்தில், மார்க்கெட்டில் ஒரு பெண் பணத்தை சரி பார்க்க தனது முகத்தை மூடிய பர்தாவை விலக்கியுள்ளார்.

இது இஸ்லாமிய மதத்துக்கு எதிரானது என கூறி அந்த பெண்ணுக்கு 30 சவுக்கடி கொடுத்து பெண் ஜிகாதிகள் கொன்றுள்ளனர்.

அதே போல ஒருவரின் தலையை இப்படி தான் வெட்ட வேண்டும் என இளம் ஐ.எஸ் இயக்கத்தை சேர்ந்த சிறுமிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது சம்மந்தமான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

-http://news.lankasri.com