நாட்டை விட்டு போ: சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்- அமெரிக்காவில் பயங்கரம்

american-flag-2aஅமெரிக்காவில் பொறியாளராக பணிபுரிந்து வரும் இந்தியர், அமெரிக்கர் ஒருவரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கார்மின் நகரில் உள்ள விமான போக்குவரத்து துறையில் பொறியாளராக பணிபுரிந்து வருபவர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா (32).

இந்தியரான இவர் தனது நண்பர் அலோக் (32) உடன் அங்குள்ள ஒரு மதுபான பாரில் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த Adam Purinton (51) என்னும் அமெரிக்க நாட்டை சேர்ந்த நபர் ஸ்ரீநிவாஸ் மற்றும் அலோக் ஆகியோரிடம் வந்து எங்கள் நாட்டை விட்டு வெளியேறு என்று கத்தியபடி இருவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஒடியுள்ளார்.

படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் ஸ்ரீநிவாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அலோக்க்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது, இதனிடையில் இருவரையும் சுட்ட Adamஐ பொலிசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் வேறு நாட்டவர்கள் வர கடும் எதிர்ப்பை ஜனாதிபதி டிரம்ப் காட்டி வரும் நிலையில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

-http://news.lankasri.com