பெண்கள் சாலையில் தனியாக செல்ல வேண்டாம்! பிரித்தானியாவில் கடும் எச்சரிக்கை

britonபிரித்தானியாவில் மர்ம மனிதன் பெண்கள் மீது தொடர் பாலியல் தாக்குதல் நடத்தி வருவதால் பெண்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள பல பகுதிகளில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

சாலையில் தனியாக நடக்கும் பெண்கள் மீதே இது அதிகம் நடைபெறுகிறது. சமீபத்தில் கூட Derby நகரில் ஒரு இளம் பெண்ணை மர்ம நபர் பாலியல் துன்புறுத்தல் செய்துவிட்டு ஓடிவிட்டான்.

இது குறித்து பெண் பொலிஸ் உயர் அதிகாரி Tracy Harrison கூறுகையில், சமீபத்தில் நடந்த சம்பவம் போலவே கடந்த இரண்டு வருடங்களில் 4 சம்பவங்கள் நடந்துள்ளன.

கடந்த 2015லிலும் 18 வயது இளம் பெண் ஒரு மர்ம நபரால் சீராழிக்கபட்டார்.

இது எல்லா செயலிலும் ஈடுபடுவது ஒரே நபர் என சந்தேகப்படுகிறோம்.

அவனை விரைவில் கைது செய்து விடுவோம் என நம்புகிறோம் என அவர் கூறியுள்ளார்.

மேலும், பெண்கள் சாலையில் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை ஆள்நடமாட்டம் உள்ள சாலைகளை பயன்ப்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

எதாவது ஆபத்து என்றால் உடனே 999 என்ற அவசர உதவி எண்ணை தொடர்ப்பு கொள்ளுங்கள் என Tracy வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-http://news.lankasri.com