தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்தியாவே உதவிகளை வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதனை ஒருபோதும் பகிரங்கப்படுத்தியது கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 30 ஆண்டுகாலமாக நீடித்த யுத்தத்தை உங்களது அரசாங்கமே முடிவுக்கு கொண்டு வந்தது.
விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சீனா மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து இராணுவ ஒத்துழைப்புகள் பெற்றுக்கொள்ளப்பட்டன.
எனினும், இந்தியாவிடம் இருந்து எந்த உதவிகளையும் கேட்கவில்லை. இதன் போது இந்தியாவின் நிலைப்பாடு எப்படியிருந்தது” என கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்து பேசிய மஹிந்த ராஜபக்ச, “இந்தியா உதவிகள் எதும் கேட்கவில்லை. ஆனாலும் அதிக உதவிகளை இந்தியா வழங்கியிருந்தது.
விடுதலைப் புலிகளுடனான யுத்தம் எங்களுக்கானது மட்டுமல்ல. அது இந்தியாவுக்குமானது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி உள்ளிட்ட இந்திய மக்கள் உங்கள் மண்ணில் வைத்தே விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டனர்.
ஆகையினால் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் இந்தியாவுக்குமானது. விடுதலைப் புலிகளை அழிக்க இந்தியா எங்களுக்கு உதவிகளை வழங்கியது. இந்தியாவுக்காகவே விடுதலைப் புலிகளுடன் போரிட்டேன்.
ஆனால் அதனை நாங்கள் வெளிப்படுத்தவில்லை. யுத்தத்தின் போது சீனா, பாகிஸ்தான் மட்டும் உதவி செய்யவில்லை. பிரித்தானியா மற்றும் அமெரிக்காவும் உதவி செய்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-tamilwin.com


























இது தெரிந்த விஷயம் , கொங்கிரஸ் திமுக ஆட்சியில் நடந்த துரோகம் . இன்னும் திமுக கொங்கராசிடம் கூட்டு சேர்த்து தமிழகத்தை ஆழ முயட்சி செய்து கொண்டிருக்கிறது . பணத்துக்காகவும் இலவசம் காகா இந்த கேடு கேட்ட தமிழ் நாட்டு மக்கள் இவர்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால் ஆச்சிரிய படுவதட்கு ஒன்றும் இல்லை,
இந்தியாவைக் காட்டிக் கொடுத்ததற்கும், அவர்களின் உண்மையான முகத்தை உலக மக்களுக்கு அடையாளம் காட்டியதற்கும் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. ஆக அன்று உங்கள் தலைமையில் நடந்தப் போரில் இலங்கையில் நடந்த இனப் படுகொலையில் இந்தியாவிற்கும் பங்குண்டென்று சொல்லாமல் சொல்லுகின்றீர்களா? அதற்கும் நன்றி.
வடக்கத்தியனுக்கு தமிழனைப்பற்றி கவலை இல்லை. கிழக்கு பாகிஸ்தானில் இருந்து அகதிகள் வந்தபோது இந்தியா போரிட்டு வங்காளதேசம் உருவாக்கி கொடுத்தது. ஆனால் தமிழர்கள் கொன்றுகுவிக்கப்பட்டபோது இந்தியா ஆயுதங்களும் பயிற்ச்சியும் உளவு பார்த்தும் கொடுத்து தமிழர்களை சிங்களவன் கொன்று குவிக்க உதவியது –என்ன – கூப்பிடு தூரத்தில் இருந்த முதுகெலும்பில்லா ஈன தமிழ் நாட்டு தமிழர்கள் 99 % உடன் பிறப்புகளின் அவல நிலையை கண்டுக்கொள்ளவே இல்லை. இதை விட வெட்கக்கேடு வேறு என்ன இருக்க முடியும்?