அமெரிக்காவை அழிக்க ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் கூட்டு சேரும் வட கொரியா

north_korea_flag_001அமெரிக்காவுடன் போர் தொடுக்க ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் வட கொரியா கூட்டு சேரவுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வட கொரியா தொடர்ந்து ஆணு ஆயுத சோதனைகளை நடத்தி அமெரிக்கா உள்ளிட்ட உலக நடுகளை மிரட்டி வருகிறது.

மேலும், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு வட கொரியா மிக பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்க ராணுவம் எச்சரித்துள்ளது.

வட கொரியாவுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அங்கு அதிகளவிலான போர் கப்பல்களை அனுப்பி வருகிறார்.

வட கொரியாவுக்கு முன்னரே, தங்களுக்கு தொல்லை தரக்கூடிய ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை ஒழித்து காட்டுவேன் என டிரம்ப் சவால் விட்டிருந்தார்.

அமெரிக்காவுக்குள் ஐ.எஸ் தீவிரவாதிகளை நுழைய விட மாட்டேன் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், வட கொரியா மற்றும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் ஆகிய இரண்டுக்கும் பொது எதிரியாக இருக்கும் அமெரிக்காவை இந்த இரண்டு தரப்பும் ஒன்று சேர்ந்து எதிர் கொள்ள முடிவு செய்துள்ளது.

பயங்கர அணு ஆயுதங்களை வட கொரியா மற்றும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் இணைத்து தயாரிக்க உள்ளதாகவும், அமெரிக்க நகரங்களில் சூட்கேஸ்களில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இப்படி செய்வதால் அது ஐ.எஸ் இயக்கம் மற்றும் வட கொரியா என இரு தரப்புக்கும் நன்மை பெயர்பதாக இருக்கும் என அவர்கள் கணக்கு போடுகிறார்கள்.

தீவிரவாத செயல்களில் எல்லா விடயங்களை நன்கு அறிந்திருக்கும் ஐ.எஸ் இயக்கம் அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீது தற்கொலை படை தாக்குதல், வெடிகுண்டுகள் போடுவது போன்ற சம்பவங்கள் செய்ய வட கொரியாவுக்கு பயிற்சி கொடுக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மொத்தத்தில், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பழமொழியின் படி வட கொரியாவும், ஐ.எஸ் தீவிரவாத இயக்கமும் பொது எதிரியான அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

-lankasri.com