மும்முனைப் போட்டியா?, பாஸுடன் மோதத் தயார் என்கிறார் அஸ்மின்

 

Azminreadyஅடுத்தப் பொதுத் தேர்தலில் ஒரு மும்முனைப் போட்டியில் பாஸ் கட்சியுடன் மோதுவதற்கு பிகேஆர் தயாராக இருப்பதாக அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறுகிறார்.

ஓர் அரசியல் கட்சி என்ற முறையில் பிகேஆர் வரக்கூடிய எதையும் சந்திக்க தயாராக இருந்தாக வேண்டும்.

சூழ்நிலை அவ்வாறு அமைந்தால், நாம் அவர்களுடன் மோத வேண்டும். இதுதான் பாஸின் முடிவு என்றால், அது அவர்களின் தேர்வு என்று ரவாங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின் போது அஸ்மின் கூறினார்.

நேற்று, பாஸ் கட்சியின் சமய மன்றம் பிகேஆருடனான உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்று சமீபத்தில் பாஸின் முக்தாமார் எடுத்திருந்த முடிவை நிலைநிறுத்தியது.

பாஸ் கட்சியுடன் இருக்கைகள் ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கதவு சாத்தப்பட்டு விட்டது என்று சிலாங்கூர் மந்திரி புசாருமான அஸ்மின் மேலும் கூறினார்.