மலேசிய மாணவர்கள் மான்செஸ்டர் குண்டு வெடிப்பு விசாரணையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

 

malaysianstudentsdetainedசமீபத்தில் மான்சென்ஸ்டர் நகரில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் சம்பந்தமாக  நேற்று மூன்று மலேசிய மாணவர்களை  மான்செஸ்டர் மாநகர் போலீசார் தடுத்து வைத்துள்ளனர்.

மான்செஸ்டர், லோங்சைட் போலீஸ் நிலையத்திற்கு அம்மாணவர்கள் மாலை மணி 5.40க்கு கொண்டுசெல்லப்பட்டனர் என்றும் விசாரணைக்குப் பின்னர் இரவு மணி 9 க்கு அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்றும் விஸ்மா புத்ரா கூறியது.

இத்தற்கொலை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் மொத்தம் 23 பேர், குழந்தைகள் உட்பட, கொல்லப்பட்டனர் மற்றும் 116 பேர் காயமுற்றனர். இதை நடத்தியவர் பிரிட்டீஷ் குடிமகன் சால்மன் ரமதான் அபிடி.

இதனிடையே, மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்களில் சிலர் இன்னும் அகப்படாமல் இருக்கின்றனர் என்று போலீசார் கூறினர்.