தாக்குதல் இப்போது தான் ஆரம்பம்: கொண்டாட வேண்டிய தருணம்: லண்டனுக்கு எச்சரிக்கை!

isis_leader_001அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினை அழிப்பதற்கு பிரித்தானியா மேற்கொள்ளும் நடவடிக்கையினை எச்சரிப்பதற்காகவே பிரித்தானியா மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக செய்தி நிறுவனமான Amaq News Agency தகவல் வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவில் கடந்த சில மாதங்களில் மூன்று தாக்குதல் அடுத்தடுத்த நடந்துள்ளது. இதனால் பிரித்தானிய மக்கள் கதிகலங்கிப் போயுள்ளனர்.

குறி வைத்து தாக்குவது போன்று இந்த தாக்குதல் அமைந்துள்ளதால் அந்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று பிரித்தானிய தலைநகர் லண்டனில் நடந்த தாக்குதலில் 7-பேர் பலியாகினர். 48-பேர் படுகாயங்கமடைந்துள்ளனர். இவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத் தாக்குதல் குறித்து ஆரம்ப கட்ட விசாரணைகளை லண்டன் பொலிஸார் முடுக்கிவிட்டுள்ளனர். இருந்தும் நாங்கள் தான் தாக்குதலை நடத்தினோம் என்று எந்த அமைப்பும் உரிமை கோராத நிலையில், Amaq News Agency என்னும் செய்தி நிறுவனமானது முக்கியமான தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஐஎஸ் அமைப்பினர் நேற்று லண்டனில் தாக்குதல் நடத்தினர். இதில் 7-பேர் பலியாகியுள்ளனர், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

எனவே இந்தத் தருணமானது கொண்டாட்டத்திற்கு உரிய தருணம். முக்கியமான இடத்தில் இருந்து கிடைத்த உத்தரவிற்கு அமையவே இத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இப்போது தான் ஆரம்பம், ரம்ஜான் மாதம் தொடங்கி உள்ளதால் தாக்குதல் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த தாக்குதலினை ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தியதற்கு முக்கிய காரணம் Love From Manchester என்ற வார்த்தை தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் சமீபகாலமாக தீவிரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் ஐஎஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்கு அமெரிக்காவுடன், பிரித்தானியா ஒன்று சேர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தவுள்ளது.

இதற்காக பயன்படுத்தப்பட்ட வாசகம் தான் Love From Manchester, பிரித்தானியாவிலிருந்து வெடிகுண்டுடன் சென்ற ஜெட் விமானத்தில் மேற்கண்ட வாசகம் இணையத்தில் வேகமாக பரவியது.

இதனால் ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களை அழிப்பதற்கு அமெரிக்காவுடன், பிரித்தானியா ஒன்று சேர்ந்துள்ளதால், அதை எச்சரிப்பதற்காகவே இத்தாக்குதல் நடத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் இத்தாக்குதல் நடத்துவதற்கு முன்பே அவர்கள் திகதியை குறித்துவிட்டதாகவும், அதன் பின் திகதி மாறியதால் அவர்கள் திகதியை மாற்றியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த தாக்குதலை அடுத்து பிரித்தானியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், முக்கியமான இடங்களில் காவல்த்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

-tamilwin.com