தமிழீழத்துக்கான போராட்டம் தொடரும்! சிறீதரன் எம்.பி.

தமிழீழத்துக்கான போராட்டம் தொடரும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற அமர்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து ஸ்கைப் வழியாக குறித்த நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றி சிறீதரன் எம்.பி., ஈழப்போராட்டத்தை தற்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்துவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் நல்லாட்சி அரசாங்கத்துக்கு வாக்களித்திருந்த போதிலும் தற்போது அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-tamilwin.com

TAGS: