மஇகா: பணம் வந்தது நஜிப்பிடமிருந்து அல்ல, பிஎன்னிடமிருந்து

subraபிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கிடமிருந்து  நேரடியாக   பணம்   பெற்றதாகவும்   அப்பணம்    கையாடப்பட்ட   பொதுப்பணம்   என்று  கூறப்படுவதையும்   மஇகா  மறுத்தது.

“என்னைப்  பொருத்தவரை   அது  பிஎன்  பணம்”,  என்று   மஇகா   தலைவர்   டாக்டர்   எஸ்.சுப்ரமணியம்     கூறினார். அது  வழக்கமாக    நடப்பதுதான்   என்றும்   அவர்   சொன்னார்.

சுப்ரமனியம்   இன்று  சிலாங்கூர்,  செராசில்   செய்தியாளர்களிடம்   பேசினார்.

தொடர்ந்து   பல     இரகசியங்களை    அம்பலப்படுத்திவரும்     சரவாக்   ரிப்போர்ட்,   மஇகா    2012க்கும்   2014க்குக்குமிடையில்  நஜிப்பின்   தனிப்பட்ட   வங்கிக்   கணக்குகளிலிருந்து    சுமார்   ரிம19மில்லியன்   பெற்றுக்கொண்டிருப்பதாகக்   கூறியிருந்தது.