உணவக உரிமையாளரை மதம் மாறச் சொன்னதில்லை- போலிடெக்னிக்

canteenசெபராங்  பிறை   போலிடெக்னிக்  (பிஎஸ்பி)  கல்லூரியின்   கேண்டீனில்   இந்திய   உணவுகளை   விற்பவர்      அத்தொழிலைத்   தொடர்ந்து   செய்ய  விரும்பினால்    இஸ்லாத்துக்கு   மதம்  மாற   வேண்டும்  என்று   நிபந்தனை    விதித்ததாகக்   கூறப்படுவதை    அக்கல்லூரி   நிர்வாகம்   மறுத்தது   என   பினாங்கு  மஇகா   இளைஞர்    தலைவர்   எம்.பிரகாஷ்    கூறினார்.

பிரகாஷ்,   தாம்   பிஎஸ்பி   இயக்குனர்   சுல்கிப்ளி  அரிப்பினைச்   சந்தித்ததாக    தெரிவித்தார்.     சுல்கிப்ளி,   கேண்டீனில்   இந்திய   உணவுகளை   விற்பனை   செய்யும்    கோபி  கிருஷ்ணன்  கோபால்   கூறுவதை   மறுப்பதாகவும்    அவர்  சொன்னார்.

கோபி  கிருஷ்ணன்  பிஎஸ்பி   கேண்டீனில்   உணவு   விற்பனை    செய்வது    நிறுத்தப்பட்டதற்கு     இனப்பாகுபாடுதான்   காரணம்   என்பதை   பிரகாஷ்   ஏற்கவில்லை.  நிர்வாகக்   காரணங்களால்தான்   அது   நிறுத்தப்பட்டதாக  கல்வி   துணை  அமைச்சர்    பி.கமலநாதன்  கூறியதையே   பிரகாஷும்   எடுத்துரைத்தார்.

இவ்விவகாரம்   தொடர்பில்   மலேசியாகினி    தொடர்பு     கொண்டபோது    பிஎஸ்பி   பதிலளிக்கவில்லை.  அதன்   பொது உறவுத்துறைக்கு   அனுப்பிய    குறுஞ்செய்திகளுக்கும்  பதிலில்லை.

“இந்திய  உணவு   விற்பனையாளரிடம்   ஹலால்    சான்றிதழ்   பெறுமாறு   கூறப்பட்டிருந்தது.  பத்து  மாதங்கள்    ஆகியும்   அவர்   இன்னும்   சான்றிதழ்   பெறவில்லை”, என   பிரகாஷ்   நேற்றிரவு   ஓர்    அறிக்கையில்    கூறினார்.

கல்விக்கழகங்களில்   உணவு   விற்பவர்கள்   ஹலால்   சான்றிதழ்   வைத்திருக்க    வேண்டும்    என்பது   கல்வி    அமைச்சின்   விதிமுறையாகும்  என்றாரவர்.

கோபி  கிருஷ்ணன்   மட்டுமல்ல ,, அந்த   கேண்டீனில்   உணவு   விற்பனை   செய்யும்   12 பேரும்   இந்த  நிபந்தனையைப்   பின்பற்றியாக   வேண்டும்.

இந்த   விவகாரத்தை    அமைதியான   முறையில்   தீர்த்துக்கொள்ள  சுல்கிப்ளி   தயாராக   உள்ளார்   என்று   கூறிய    பிரகாஷ்,    கோபி   ஹலால்   சான்றிதழ்   பெற   உதவவும்   அவர்   தயார்  என்றார்.