மசூதியில் வெடிகுண்டு தாக்குதல்..வழிபட்டுக்கொண்டிருந்த 20 பேர் உடல் சிதறி பலி

afghஆப்கானிஸ்தான் மசூதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேற்கு ஹீரட்டில் சிறுபான்மையினரான ஷியா பிரிவின் ஜவாடியா மசூதியலே இத்தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.

மக்கள் மசூதிக்குள் வழிபட்டுக்கொண்டிருந்த போது இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் சிக்கி உயிரிழந்ததாக இதுவரை 20 பேரின் உடல்கள் ஹீரட் நகர மருத்துவமனைக்கு வந்துள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினரான ஷியா பிரிவை சேர்ந்தவர்களை, நாட்டின் கிழக்கில் செயல்படும் ஐஎஸ்யுடன் இணைப்பில் உள்ள குழு தொடரந்து அச்சுறுத்தி வருவது நினைவுக் கூறதக்கது.

ஹீரட், ஜவாடியா மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உடனடியாக எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.

-lankasri.com