முன்னாள் பிரதமருக்குக் கொஞ்சமும் மரியாதை இல்லையா? நேற்றைய சம்பவத்தை போலீசார் விசாரிக்க வேண்டும்

flare நேற்றைய   மறைப்பதற்கு   ஏதுமில்லை  2.0  கருத்தரங்கில்   நடந்த  வன்செயல்களைக்   குறிப்பாக   முன்னாள்   பிரதமருக்கும்   அவரின்  துணைவியாருக்கும்   எதிராக     நடந்த  சினமூட்டும்   செயல்களைப்   பல  தரப்பினரும்   கண்டித்துள்ளனர்.

“ அங்கு   நடந்த   எதுவுமே  சரியல்ல.  பொதுக்   கருத்தரங்குகளில்   சண்டையிடுவதையும்   சுடரெரிகளைக்  கொளுத்திப்போடுவதையும்  யாரும்  நியாயமான   செயல்கள்   என்று   கூற  மாட்டார்கள்.

“அவை  முன்னாள்   பிரதமர்  டாக்டர்  மகாதிரையும்   அவரின்  துணைவியார்   டாக்டர்   சித்தி   ஹஸ்மா   முகம்மட்   அலியையும்    அவமதிக்கும்   செயல்களாகும்.

“அதைச்  செய்தவர்களும்   அவர்களைச்   சார்ந்தவர்களும்   அதற்காக   வெட்கப்பட   வேண்டும்”,  என   பிகேஆர்   இளைஞர்   தலைவர்   நிக்   நஸ்மி   நிக்   அஹமட்  ஓர்   அறிக்கையில்   கூறினார்.