பாதுகாவலர்களாக பணியாற்றிவந்த அபு சயாப் ஆள்கள் கைது

igpகோலாலும்பூரில்  பாதுகாவலர்களாக  வேலை   செய்துவந்த   பிலிப்பினோ   நாட்டவர்   எழுவரை  போலீஸ்  கைது   செய்துள்ளது.  அவர்கள்  அனைவருமே  அபு  சயாப்   ஆள்கள்   என்று   ஐயுறப்படுகிறது.

புக்கிட்  அமான்   பயங்கரவாத   எதிர்ப்புப்  பிரிவு,  செப்டம்பர்  14-இல்,   மாநகரின்  பல   பகுதிகளில்   அவர்களைக்  கைது   செய்ததாக    இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்   போலீஸ்   முகம்மட்  ஃபுசி   ஹருன்   இன்று  ஓர்   அறிக்கையில்   கூறினார்.

“அவர்கள்  கோலாலும்பூரிலும்   சிலாங்கூரிலும்  பல   நிறுவனங்களில்   பாதுகாவலர்களாக   வேலை   செய்து   வந்தார்கள்”,  என்று  ஃபுசி  கூறினார்.

அவர்கள்   அனைவருமே   2015,   செப்டமரில்   சாபா,  சண்டாகான்   வழியாக     நாட்டுக்குள்   வந்தவர்கள்  என்றாரவர்.