கெடாவில் வெள்ளம்: ஆயிரம் பேருக்குமேல் பாதிப்பு

floodகெடாவில்  வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டோர்   எண்ணிக்கை   இன்று  காலை   1,060 ஆக   உயர்ந்தது.

அவர்கள்  13  துயர்துடைப்பு  மையங்களில்  வைக்கப்பட்டுள்ளனர்.

அம்மையங்கள்  கோலா  மூடா,   கோட்டா  ஸ்டார்,   குபாங்   பாசு,  பொக்கோக்  செனா,  பெண்டாங்   ஆகிய    மாவட்டங்களில்    உள்ளதாக   மாநிலப்  பேரிடர்    மேலாண்மைத்  துறை   இன்று  ஓர்   அறிக்கையில்   கூறியது.

நேற்றிரவு,   மந்திரி   புசார்   அஹ்மட்  பாஷா  முகம்மட்  ஹனிபா   கோலா  மூடாவில்   வெள்ள  அகதிகளைச்   சென்று    பார்த்தார்.