மற்றுமொரு சமயப் பள்ளியில் தீ

fireமற்றுமொரு  சமயப்  பள்ளியில்   தீ  பற்றியதாக   நியு  ஸ்ரேய்ட்ஸ்   டைம்ஸ்    அறிவித்துள்ளது.

சிரம்பான்,  ராஜா   செங்காவில்  உள்ள  யயாசான்   சோபா   அஸ்தானா   தாபிஸ்  பள்ளியில்   நேற்றிரவு   தீ  பற்றியதாக  அது  கூறியது. பின்னிரவு   1.50க்கு   தீயணைப்பு,   மீட்புத்  துறைக்கு   அவசர   அழைப்புச்   சென்றுள்ளது.

சம்பவம்   நடந்த  இடத்துக்கு  விரைந்து   சென்ற   தீயணைப்புப்   படையினர்   நெருப்பை  முற்றிலும்   கட்டுப்படுத்தி    விட்டனர்.  மாணவர்  விடுதியில்   இருந்த   37   பேரும்  காயமேதுமின்றித்    தப்பினர்.  மூவர்  மட்டும்  புகையைச்  சுவாசித்ததால்    பாதிக்கப்பட்டிருந்தனர்.   அவர்களுக்குச்  சிகிச்சை   அளிக்கப்பட்டது.

மகளிர்-மட்டும்  மாணவர்  விடுதியின்  60  விழுக்காடு  தீயில்   அழிந்ததாக   ரெம்பாவ்  தீயணைப்பு,  மீட்புச்  சேவை  அதிகாரி  முகம்மட்  புவாட்    கூறினார்.