லாஸ் வேகஸ் சூதாட்ட விடுதி அருகே துப்பாக்கி சூடு: 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் உள்ள மாண்டலே பே ஹோட்டல் அருகே பலத்த துப்பாக்கிச் சூட்டில்20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும். இந்த சம்பவத்தில் குறைந்தது 100 பேர் காயமடைந்தனர்.

மாண்டலே பே சூதாட்ட விடுதியின் மேல் மாடியில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக இந்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடுதியில் ஒரு நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக அடையாளம் காணப்பட்ட உள்ளூர்வாசியான சந்தேக நபர் போலீஸ் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க நேரப்படி இரவு 10.30 மணிக்கு நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் பலர் பலியாகி இருக்கக்கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன. சம்பவம் நடந்த இந்த இடத்தை தவிர்க்குமாறு மக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குறைந்தது 100 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக ஒரு மருத்துவமனை பேச்சாளர் அமெரிக்க ஊடகத்தில் தெரிவித்தார். -BBC_Tamil

TAGS: