வாரிசான் உதவித் தலைவருக்கு 5 நாள் தடுப்புக்காவல்

 

பார்டி வாரிசான் சாபாவின் உதவித் தலைவர் பீட்டர் அந்தோனி மற்றும் இன்னொரு 52 வயதான வணிகர் ஆகிய இருவரையும் ஐந்து நாள்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) பெற்றுள்ளது.

அந்த இருவரின் வாக்குமூலங்களை சாபா எம்எசிசி தலைமையகத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவ்விருவரும் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் கோட்டா கின்னபாலு நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட போது எம்எசிசியின் மஞ்சள் நிற லோக்கப் உடை அணிந்திருந்தனர்.

அவர்களைச் சந்திக்க சுமார் 100 வாரிசான் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தனர்.