டிஎபியின் மறுதேர்தலை நடத்த அமெரிக்க தணிக்கையாளர்

 

டிஎபி அதன் மத்திய செயற்குழுவிற்கான தேர்தலை நவம்பர் 12 இல் நடத்தும். அத்தேர்தலை நடத்துவதற்காக ஓர் அமெரிக்க தணிக்கை நிறுவனத்தை அது நியமித்துள்ளது.

மன்றங்கள் பதிவகம் (ரோஸ்) அந்த நியமனத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சை நிறுவனம் (கிராண்ட் தோர்ண்டன்) தணிக்கையாளராக நியமிக்கப்பட்டதை ரோஸ் ஏற்றுக்கொள்கிறது டிஎபியிடம் தெரிவிக்கப்பட்டது என்று ரோஸின் தலைமை இயக்குனர் முகம்மட் ராஸின் அப்துல்லா தெரிவித்ததாக பெர்னாமா செய்தி கூறுகிறது.