நோ ஓமார் : சிலாங்கூர் மந்திரி பெசார் ஆகும் ஆசை இல்லை

எதிர்வரும் பொதுத் தேர்தலில், பாரிசான் நேசனல் சிலாங்கூரைக் கைப்பற்றினாலும், மந்திரி பெசார் ஆகும் ஆசை தனக்கு இல்லை என, அம்மாநிலத்தின் அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் நோ ஓமார் கூறியுள்ளார்.

இதுநாள் வரை, சிலாங்கூர் மாநில மக்களுக்குத் தானும் பாரிசானும் வழங்கிய சேவைகள் நேர்மையானவை, எந்தவொரு பிரதிபலனையும் பதவியையும் தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

“ஒரு தலைவர் பதவி ஆசை கொண்டிருக்கக்கூடாது, அப்படி இருந்து பதவி கிடைக்கவில்லையானால், அது அவர்களை விரக்தியடையச் செய்து, கட்சியில் பிளவை ஏற்படுத்தும்.”

“பதவியைக் கட்சியின் தலைமைத்துவம் முடிவு செய்யும், தற்போதைய முக்கியப் பணி சிலாங்கூரை வென்றெடுப்பது. தகுதி வாய்ந்த யார் வேண்டுமானாலும், மந்திரி பெசார் ஆகலாம்,” என்று, இன்று, தாமான் ஶ்ரீ அமான் அடுக்குமாடி குடியிருப்பில், ஒரு தீயணைப்புப் பிரச்சாரத்தைத் தொடக்கி வைத்தப்பின், செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.