தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும்; இரா.சம்பந்தன்!

“புதிய வருடம் ஆரம்பிக்கின்ற வேளையில், தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அடையும் நோக்கில் ஒன்றுபட்டு செயற்பட முன்வருமாறு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றறேன். இதனைச் செய்வதன் மூலம் எமது எதிர்காலச் சந்ததிக்கு ஒரு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்த முடியும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டினை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

-4tamilmedia.com

 

TAGS: