வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பில் இந்தியாவால் எதுவும் செய்ய முடியாது: இந்தியத் தூதர்

‘வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பு தொடர்பில் இந்தியாவினால் எதுவும் செய்ய முடியாது. அது, இலங்கையின் உள்நாட்டு விவகாரம்’ என்று இலங்கைக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்துவை கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் சந்தித்துப் பேசியிருந்தார்.

அதன்போது, வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இணைப்புக்கு தொடர்பில் இலங்கைக்கு இந்தியா அழுத்தங்களை வழங்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் வலியுறுத்தியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் போதே, வடக்கு- கிழக்கு இணைப்பு விடயம் இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்றும், அதில் இந்தியாவால் தலையிட முடியாது என்றும் இந்தியத்தூதர் பதிலளித்துள்ளார்.

-4tamilmedia.com

TAGS: