மகாதீர் மாறிவிட்டார், அன்வார் கூறுகிறார்

அன்வார் இப்ராஹிம் துன் டாக்டர் மகாதிருக்கு மீண்டும்  தனது ஆதரவைத் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, அவருடைய முன்னாள் தலைவர் தற்போதைய அரசாங்கத்தால் துன்புறுத்தப்படுவதாகவும் அன்வார் கூறினார்.

“அவர் மாறிவிட்டார் மற்றும் சீர்திருத்த திட்டத்தில் உறுதியாக இருக்கிறார்,” என்று அன்வார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியில் இணைந்ததிலிருந்து, மகாதீர் மாற்றங்களைச் செய்ய தயாராக இருக்கிறார் என்ற அவர், மகாதீரை சிம்பாவே தலைவர், ரோபட் முகாபேவுடன் ஒப்பிட்டு பேசுவது நியாயமல்ல என்றார்.

“அரசாங்கம் அதிகமான தீங்குகளைச் செய்துவிட்டது,” என்றார் அவர்.

கடந்த மாதம், ஹராப்பான் தலைவரான மகாதீரைப் பிரதமர் வேட்பாளராக பக்காத்தான் ஹராப்பான் அறிவித்தது. சீர்திருத்த திட்டங்களைத் தியாகம் செய்யவேண்டி வரும் என்ற அச்சத்தில், இதனை சில பிகேஆர் தலைவர்கள் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.