ஆயர் ஹீத்தாமில் டிஎபியின் சின் தோங் போட்டியிடுகிறார்

 

எதிர்பார்த்தவாறு ஜோகூர் ஆயர் ஹீத்தாம் நாடாளுமன்ற தொகுதியில் டிஎபியின் ஜோகூர் மாநில தலைவர் லியு சின் தோங் 14 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் மசீசவின் சார்பில் அதன் துணைத் தலைவர் வீ கா சியோங் களமிறங்கிறார்.

ஆயர் ஹீத்தாம் ஹரப்பான் தேர்தல் மையத்தில் டிஎபியின் 52 ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் இந்த அறிவிப்பைச் செய்தார்.

இன்று நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் 1,000 க்கு மேற்பட்ட ஹரப்பான் தலைவர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

ஹரப்பான் கூட்டணியின் தலைவர் மகாதிர் முகமட், ஜோகூர் ஹரப்பான் தலைவர் முகைதின் யாசின், டிஎபி தலைவர் டான் கோக் வை, டிஎபி நாடாளுமன்ற தலைவர் லிம் கிட் சியாங், அமனா தலைவர் முகம்மட் சாபு மற்றும் பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் ஆகியோரும் அங்கிருந்தனர்.