போலியான செய்தி எதிர்ப்பு சட்டத்தை ரோஸ்மா ஆதரிக்கிறார்

 

போலியான செய்தி எதிர்ப்பு சட்டத்தை இயற்றுவதற்கான புத்ரா ஜெயாவின் திட்டத்தை தாம் ஆதரிப்பதாக பிரதமர் நஜிப்பின் துணைவி ரோஸ்மா மான்சூர் கூறுகிறார்.

“நான் அதை ஆதரிக்கிறேன் – போலியான செய்திக்கான புதிய சட்டம் – நான் அதை ஆதரிக்கிறேன்”, என்று கோலாலம்பூரில் இன்று ஒரு நிகழ்ச்சியில் ரோஸ்மா வெடுக்கென்று கூறினார்.

போலியான செய்திகளுக்கு எதிரான சட்டத்தை புத்ரா ஜெயா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.