நாடாளுமன்றத்துக்கு வெளியில் வீடு கேட்டு ஆர்ப்பாட்டம்: ஒருவர் கைது

இன்று   நாடாளுமன்றத்துக்கு   வெளியில்   ஆர்ப்பாட்டம்  ஒன்று  நடந்தது.
பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்   தங்களுக்கு   வாக்குறுதி   அளித்தபடி     வீடுகளைக்  கட்டித்தர    வேண்டும்    என்ற  கோரிக்கையை  முன்வைத்து   ஜிஞ்சாங்  உத்தாரா     ஏ, பி, சி, டி  பகுதிகளில்   உள்ள  நீண்ட   வீடுகளின்   குடியிருப்பாளர்கள் அந்த   ஆர்ப்பாட்டத்தை    நடத்தினர்.

ஆர்ப்பாட்டக்காரர்களில்  ஒருவர்  கைது   செய்யப்பட்டார். ஆர்ப்பாட்டக்காரர்கள்  கொடுத்த  மகஜரைத்   துணைப்  பிரதமர்    அஹமட்   ஜாஹிட்  ஹமிடியின்   சிறப்பு    அதிகாரி  நோர்ஸியான்   தம்பி  பெற்றுக்கொண்டார்.