கட்சியைக் கலைக்கும் 16 அம்னோ உறுப்பினர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது

 

கட்சியிருந்து நீக்கப்பட்ட 16 அம்னோ உறுப்பினர்களின் மன்றங்கள் பதிவாளருக்கு (ரோஸ்) எதிரான நீதிபரிபாலன மறுஆய்வுக்காக அனுமதி கோரும் மனுவை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

மன்றங்கள் சட்டம் 1966, செக்சன் 18சி கட்சியின் உறுப்பினர்கள் கட்சித் தகராறை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியாது என்று கூறுகிறது என்று நீதிபதி கமாலுடின் முகமட் சைட் கூறினார். ஆகவே, தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு செலவுத் தொகை இல்லாமல் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி கூறினார்.

வாதிகளின் வழக்குரைஞர் முகமட் ஹனிப் காட்ரி அப்துல்லா மேல்முறையீட்டிற்கான மனு செய்யப்படும் என்று செய்தியளர்களிடம் தெரிவித்தார்.